• Thu. Jun 5th, 2025

24×7 Live News

Apdin News

பொள்ளாச்சி மனநலம் குன்றியவர் கொலையில் என்ன நடந்தது? மனநல காப்பகங்களை கண்காணிப்பது யார்?

Byadmin

Jun 3, 2025


மனநல காப்பகத்தில் கொலை, யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட், கோவை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள்

பட மூலாதாரம், Yuthira Website

படக்குறிப்பு, யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட்

பொள்ளாச்சியில் மனநல காப்பகத்தில் இருந்த மனநலம் குன்றியவர், கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் மனநல காப்பகங்கள் மீதான ஆய்வு தொடங்கியுள்ளது. அனைத்து மனநல காப்பகங்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில், ‘யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற பெயரில், மனநல காப்பகம் செயல்பட்டு வந்தது.

ஆட்டிசம், டிஸ்லெக்சியா, டவுன்சிண்ட்ரோம் உள்ளிட்ட 5 வகையான மனநல பாதிப்பு உள்ளவர்களுக்கான காப்பகம் மற்றும் பயிற்சி மையம் என்ற பெயரில் இதற்கு இணையத்திலும் ஏராளமான புகைப்படங்களுடன் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் மனநலம் குன்றியவர் கொலை எதிரொலி; காப்பகங்களை கண்காணிப்பது யார்?
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இணைய விளம்பரத்தில் ஈர்க்கும் மனநல காப்பகம்

நட்சத்திர விடுதிகளுக்கு இணையான வசதிகளுடன் கூடிய கட்டடம், உள்விளையாட்டு அரங்கம், சிறப்புப் பயிற்சி மையங்கள், திறந்தவெளி மைதானங்கள், அதிநவீன பயிற்சி வகுப்பறைகள் என இந்தக் காப்பகத்தின் விளம்பரமே எல்லோரையும் ஈர்ப்பதாக உள்ளது.

By admin