நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது போதைப்பொருட்களுடன் மேலும் 277 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 86 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 112 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 73 பேரும், கஞ்சா செடிகளுடன் 6 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, 61 கிராம் 161 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 744 கிராம் 377 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 1 கிலோ 507 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 2 இலட்சத்து 57 ஆயிரத்து 991 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
The post போதைப்பொருட்களுடன் மேலும் 277 பேர் கைது! appeared first on Vanakkam London.