• Tue. Jun 24th, 2025

24×7 Live News

Apdin News

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது

Byadmin

Jun 24, 2025


போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன்  போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

‘ரோஜாக்கூட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இந்நிலையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் பொலிஸாரின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார்.

By admin