• Sun. Oct 12th, 2025

24×7 Live News

Apdin News

போதைப்பொருள் வழக்கிலிருந்து தப்ப ரஷ்ய ராணுவத்தில் இணைந்த இந்தியர் – யுக்ரேன் ராணுவத்திடம் பிடிபட்டார்

Byadmin

Oct 12, 2025


போதைப்பொருள் வழக்கிலிருந்து தப்பிக்க ரஷ்ய ராணுவத்தில் இணைந்த இந்தியர் - யுக்ரேன் ராணுவத்திடம் பிடிபட்டார்
படக்குறிப்பு, குஜராத் மாநிலத்தை சேர்ந்த 22 வயதான சஹில் மஜோத்தி இரு ஆண்டுகளுக்கு முன்பு கணினி பொறியியல் படிப்பதற்காக ரஷ்யா சென்றார்.

ரஷ்ய படைகளின் சார்பில் சண்டையிட்டதாக இந்தியாவை சேர்ந்த ஒருவரை யுக்ரேன் சிறைபிடித்துள்ளது, யுக்ரேன் – ரஷ்யா போரில் இந்தியர் ஒருவர் இவ்வாறு காவலில் வைக்கப்படுவது இதுவே முதன்முறை.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 22 வயதான சஹில் மஜோத்தி இரு ஆண்டுகளுக்கு முன்பு கணினி பொறியியல் படிப்பதற்காக ரஷ்யா சென்றார். கடந்த ஏப்ரல் மாதம் போதை வழக்கு ஒன்றில் தன் மகன் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக அவருடைய தாயார் கூறுகின்றார்.

இந்த போதைப்பொருள் வழக்கில் சிறை தண்டனையை தவிர்ப்பதற்காக மஜோத்தி ரஷ்ய ராணுவத்தில் இணைந்ததாக, கடந்த செவ்வாய்கிழமை அன்று யுக்ரேன் ராணுவம் வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தாங்கள் விசாரித்து வருவதாகவும் யுக்ரேனிடமிருந்து தங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இதுதொடர்பாக, ரஷ்ய அரசாங்கம் தன் பதிலை தெரிவிக்குமாறு பிபிசி கேட்டுக்கொண்டுள்ளது.



By admin