• Sat. Jun 28th, 2025

24×7 Live News

Apdin News

போதைப்பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீகிருஷ்ணா இருவருக்கும் என்ன தண்டனை கிடைக்கலாம்?

Byadmin

Jun 28, 2025


போதைப் பொருள் பயன்படுத்துதல் விவகாரம், முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள், நடிகர் ஶ்ரீகாந்த், நடிகர் ஶ்ரீ கிருஷ்ணா

பட மூலாதாரம், krishnakulasekaran/Instagram & actorsrikanth/Instagram

படக்குறிப்பு, ஸ்ரீகிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாந்த்

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

போதைப் பொருட்களை நண்பர்களுக்கு அளித்ததாக நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவையும் அதனை விற்பனை செய்த கெவின் என்பவரையும் உரிய ஆதாரங்களுடன் கைது செய்துள்ளதாக, ஜூன் 26 அன்று சென்னை மாநகர காவல்துறை கூறியுள்ளது.

வாட்ஸ்ஆப் குழுக்களை உருவாக்கி அதன்மூலம் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் போதைப் பொருள்களைப் பெற்று வந்ததாகக் காவல்துறை கூறுகிறது. இதனை கிருஷ்ணாவின் வழக்கறிஞர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் எதிர்க்கட்சியின் தொழில்நுட்பப் பிரிவில் நிர்வாகியாக இருந்ததால் அரசியல் ரீதியான பழிவாங்கலில் கிருஷ்ணா சிக்கியிருப்பதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்த வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அதிகபட்சம் என்ன தண்டனை கிடைக்கலாம்?

By admin