• Tue. Sep 9th, 2025

24×7 Live News

Apdin News

போராட்டம் முடிந்தும் பணிக்குத் திரும்பாத சென்னை தூய்மைப் பணியாளர்கள் – என்ன பிரச்னை?

Byadmin

Sep 8, 2025


ஆகஸ்ட் 1 முதல் 13 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வந்தனர்.
படக்குறிப்பு, ஆகஸ்ட் 1 முதல் 13 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வந்தனர்.

“முப்பது நாட்களுக்கும் மேலாக வேலையில்லை. வீட்டில் ரேசன் அரிசி இருக்கிறது. ஆனால், மளிகைப் பொருட்களை வாங்க பணம் இல்லை. இந்த வேலையை நம்பியே இருக்கிறோம். முதலமைச்சர் நினைத்தால் எளிதில் பிரச்னை தீர்ந்துவிடும்” எனக் கூறுகிறார், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் ஜோதி.

இவருக்கு மூன்று குழந்தைகள். சென்னை மாநகராட்சியின் துய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து கடந்த 30 நாட்களைக் கடந்தும் இவர் போராடி வருகிறார்.

“எதாவது ஓர் இடத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து பேசினாலே காவல்துறை விரட்டுகிறது” எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

செப்டெம்பர் 4 அன்று சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் ஆலோசனை நடத்துவதற்காக கூடிய தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக காவல்துறை கைது செய்தது.

By admin