• Sat. May 3rd, 2025

24×7 Live News

Apdin News

ப்ளே ஆஃப்க்குள் நுழையப்போவது யார்? – 4 இடங்கள், 6 அணிகள் கடும் போட்டி

Byadmin

May 2, 2025


ப்ளே ஆஃப்  4 அணிகள் யார்? 6 அணிகளுக்கு இடையே கடும் போட்டி

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், க. போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

2025 சீசன் ஐபிஎல் தொடரில் 50-வது லீக் ஆட்டம் நேற்றுடன் முடிந்தது. அனைத்து அணிகளும் ஏறக்குறைய 9 முதல் 10 ஆட்டங்களில் விளையாடிவிட்டன. இன்னும் ஒவ்வொரு அணியும் 3 அல்லது 5 போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டியுள்ளதால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள் நிலவரம் தெரியத் தொடங்கியுள்ளது.

10 அணிகளில் ஏற்கெனவே சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெளியேறிவிட்ட நிலையில் 8 அணிகள் மட்டுமே ரேஸில் உள்ளன.

இதில் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பு என்பது கம்பி மேல் நடக்கும்கதைதான். சிறிய சறுக்கல் அல்லது தோல்வி ஏற்பட்டாலும் ப்ளே ஆஃப் வாய்ப்பு காணாமல் போய்விடும். ஆதலால், உண்மையான போட்டி என்பது டாப்-6 இடங்களில் இருக்கும் அணிகளிடையேதான்.

டாப்-6 இடங்களில் மும்பை, ஆர்சிபி, பஞ்சாப், குஜராத், டெல்லி கேபில்ஸ், லக்னெள ஆகிய அணிகள் உள்ளன.

By admin