• Sat. Apr 19th, 2025

24×7 Live News

Apdin News

மகாராஷ்டிராவில் ஒரே ஒரு மரத்திற்காக ரயில்வே ரூ.1 கோடி டெபாசிட் செய்தது ஏன்?

Byadmin

Apr 15, 2025


செம்மரத்திற்கு ரூ.1 கோடி இழப்பீட்டைப் பெற்ற விவசாயி, மகாராஷ்டிரா செய்திகள், மும்பை, பம்பாய் உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம், Bhagyashree Raut

  • எழுதியவர், பாக்யஶ்ரீ ராவத்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த செம்மரம் ஒன்றுக்காக ரூ. 1 கோடியை மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் மத்திய ரயில்வே செலுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு, ரயில்வே ரூ. 1 கோடியை செலுத்தியது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விவசாயி, இந்த பணத்தில் இருந்து பாதியை அதாவது ரூ. 50 லட்சத்தை எடுத்துக் கொள்ளவும் ஏப்ரல் 9-ஆம் தேதி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

செம்மரம் ஒன்றுக்காக விவசாயி ஒருவர் இழப்பீடு பெற்றது எப்படி? நடந்தது என்ன? இங்கே பார்க்கலாம்!

உண்மையில் நடந்தது என்ன?

மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் அமைந்துள்ளது கர்ஷி என்ற கிராமம். இங்கே தன்னுடைய ஐந்து மகன்களோடு வாழ்ந்து வருகிறார் விவசாயி கேசவ் ஷிண்டே. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி அன்று செம்மரம் ஒன்றுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

By admin