• Sun. Oct 12th, 2025

24×7 Live News

Apdin News

மகாராஷ்டிராவில் ‘போலி திருமணங்களால்’ ஏமாறும் இளைஞர்கள்- பின்னணி என்ன?

Byadmin

Oct 11, 2025


மகாராஷ்டிரா, போலி திருமணங்கள், இளைஞர்கள், விவசாயம், கிராமங்கள்
படக்குறிப்பு, சாகருக்கு ஒரு ‘போலி திருமணம்’ நடந்துள்ளது.

    • எழுதியவர், கணேஷ் போல், ஸ்ரீகாந்த் பங்காலே
    • பதவி, பிபிசி மராத்தி

“விவசாயிகளின் பிள்ளைகளுக்கு சீக்கிரமே திருமணம் நடப்பதில்லை. அதனால்தான் விரக்தியில் ஏதேனும் ஒரு வழியை தேர்வு செய்கிறார்கள். எனக்கும் அதேதான் நடந்தது, நான் அவசரமாக ஒரு திருமணம் செய்து கொண்டேன். இதில் கிட்டத்தட்ட ரூபாய் 5 லட்சத்தை இழந்தேன்.”

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் ஜுன்னர் நகரைச் சேர்ந்த சாகர், தனக்கு நடந்த போலித் திருமணம் பற்றி விவரித்தார்.

தற்போது மகாராஷ்டிராவில், குறிப்பாக அதன் கிராமப்புறங்களில், முப்பது வயதுக்கு மேற்பட்ட பல இளைஞர்களை, ஒரு கேள்வி தொடர்ந்து துரத்துகிறது: ‘எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?’

பொதுவாக பார்க்கையில், இன்றைய பெண்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் மனநிலை என்பது, ‘கிராமத்தில் வசிக்கும் ஒரு விவசாயி தங்களுக்கு கணவர்/மருமகனாக வேண்டாம்’ என்பது போல் தெரிகிறது, ஆனால் இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.



By admin