• Fri. Dec 12th, 2025

24×7 Live News

Apdin News

மகாராஷ்டிரா: விடுமுறை முடிந்து ஹாஸ்டல் திரும்பும் மாணவிகள் தங்களுக்கு கர்ப்ப பரிசோதனை எடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு ஏன்?

Byadmin

Dec 12, 2025


சம்பந்தப்பட்ட துறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மாநில மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (சித்தரிப்புப் படம்)

மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள ஓர் அரசு பழங்குடியினர் விடுதியில் தங்கியுள்ள பல மாணவிகள், விடுமுறை முடிந்து விடுதிக்குத் திரும்பும்போது, சிறுநீரை வைத்துச் செய்யப்படும் கர்ப்பப் பரிசோதனைக்குத் தாங்கள் உட்படுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசு விதிகளில் அத்தகைய நிபந்தனை எதுவும் இல்லாதபோதிலும், தாங்கள் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கூறப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

மகாராஷ்டிராவின் பழங்குடியினர் மேம்பாட்டு ஆணையர் லீனா பன்சோத், இதுபோன்ற எந்தப் பரிசோதனையும் நடத்தப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இத்தகைய பரிசோதனையை நிறுத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட பின்னரும்கூட, இந்த நடைமுறை தொடர்வதாக மாணவிகள் கூறுகின்றனர்.

மகாராஷ்டிராவின் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையால் நடத்தப்படும் ஓர் அரசு விடுதியில் தங்கியுள்ள கல்லூரி மாணவியான சினேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பிபிசி மராத்தியிடம் பேசியபோது, “நாங்கள் ஏன் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்? நான் முதலாம் ஆண்டு கல்லூரிப் படிப்புக்கு வந்ததில் இருந்தே, இதைச் செய்யவில்லையெனில் விடுதியில் தங்க அனுமதிக்கப்பட மாட்டோம் என்று மேடம் கூறி வருகிறார்,” என்று தெரிவித்தார்.

By admin