8
மான்செஸ்டர் நகரத்திற்கு வெளியேயுள்ள கோர்டன் மற்றும் டென்டன் பகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த தேர்தல் முடிவு தொழிற்கட்சிக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவர் ஒப்புக்கொண்டார். கட்சி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது கவலைக்கிடமானது என்றாலும், இடைத்தேர்தல்களில் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் சவால்களை எதிர்கொள்வது பொதுவானது என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வாக்காளர்கள் விரக்தியடைந்து மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதையும் அவர் புரிந்துகொள்கிறார் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
“எனக்கு மூச்சு இருக்கும் வரை மக்களுக்காக நான் தொடர்ந்து போராடுவேன்,” என பிரதமர் உறுதியளித்தார்.
அத்துடன், இடது மற்றும் வலதுசாரி தீவிரவாதக் கருத்துகளுக்கு எதிராக தொழிற்கட்சி தொடர்ந்து நிலைப்பாடு கொண்டிருக்கும் என்றும் ஸ்டார்மர் வலியுறுத்தினார்.