• Fri. Jun 13th, 2025

24×7 Live News

Apdin News

மக்கள் தொகை கணக்கெடுப்பு: 1951-க்குப் பிறகு முதன் முறையாக இடம் பெறும் கேள்வி எது?

Byadmin

Jun 11, 2025


இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் கடைசியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்டது

  • எழுதியவர், பிரியங்கா
  • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியாவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான ‘ரெஃப்ரன்ஸ் டேட்’ 2027 மார்ச் முதல் நாள் என்று, இந்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை அன்று (ஜூன் 4) தெரிவித்தது.

இருப்பினும், மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும் என்றோ, எப்போது முடியும் என்றோ குறிப்பிட்ட தேதியை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

மக்கள் தொகை தரவுகளின் அடிப்படையில், ‘ரெஃப்ரன்ஸ் டேட்’ என்பது தரவைச் சேகரித்து பகுப்பாய்வு செய்வதற்கான குறிப்புப் புள்ளியாகப் பயன்படுத்தப்படும் தேதியாகும். இது மக்கள் தொகை எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்ட தேதி அல்லது பிற மக்கள் தொகை தகவல்கள் தொடர்புடைய தேதியாகும்.

நாட்டில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படும்.

By admin