• Sun. Jun 8th, 2025

24×7 Live News

Apdin News

மக்கள் தொகை கணக்கெடுப்பை திமுக எதிர்ப்பது ஏன்?

Byadmin

Jun 8, 2025


மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு, நாடாளுமன்றம், ஸ்டாலின், தமிழ்நாடு, திமுக, பாஜக

பட மூலாதாரம், X/MK Stalin

படக்குறிப்பு, முதலமைச்சர் ஸ்டாலின்

சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027 மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக, இந்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை அன்று (ஜூன் 4) தெரிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித் திட்டத்தை பா.ஜ.க வெளிப்படையாக அறிவித்துள்ளதாக விமர்சித்துள்ளார். மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ‘சதி’ என முதலமைச்சர் கூறுவது ஏன்?

இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரும் 2027 ஆம் ஆண்டு இரு கட்டங்களாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

பனிப்பொழிவு பகுதிகளாக இருக்கும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக், இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் 2026 அக்டோபர் 1 முதல் கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



By admin