• Tue. Nov 18th, 2025

24×7 Live News

Apdin News

மதுரையில் ஒரு மாதமாக புதிய மேயரை நியமிப்பதில் என்ன பிரச்னை?

Byadmin

Nov 18, 2025


மதுரை, மேயர் ராஜினாமா, சிபிஎம்,  திமுக

பட மூலாதாரம், X/rajprathaban

மதுரை மாநகரின் மேயராக இருந்த இந்திராணி ராஜினாமா செய்து நான்கு வாரங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இப்போதுவரை புதிய மேயர் தேர்வு செய்யப்படவில்லை.

மதுரை மாநகராட்சியில் ஊழியர்களுடன் சேர்ந்து மாமன்ற உறுப்பினர்களும் வரி மோசடி செய்த விவகாரம் சில மாதங்களுக்கு முன்பாக மிகப் பெரிய அளவில் வெடித்தது.

இந்த விவகாரத்தில் மாநகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள், கவுன்சிலரின் கணவர் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர். விவகாரம் பெரிதான நிலையில் மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவர்கள் இரண்டு பேரும் மண்டலத் தலைவர்கள் ஐந்து பேரும் ராஜினாமா செய்தனர்.

இதற்குப் பிறகு மதுரை மாநாகராட்சியின் மேயராக இருந்த இந்திராணியின் கணவர் பொன் வசந்த் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதற்குப் பிறகு அவர் தி.மு.கவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அக்டோபர் 9-ஆம் தேதி பொன் வசந்த் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அக்டோபர் 15-ஆம் தேதி மாநகராட்சியின் மேயரான இந்திராணி பொன் வசந்த் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா 17-ஆம் தேதி மாமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

By admin