• Wed. Aug 20th, 2025

24×7 Live News

Apdin News

மதுரையில் நாளை தவெக 2-வது மாநில மாநாடு | tomorrow 2nd state conference of tvk will be held in Madurai

Byadmin

Aug 20, 2025


மதுரை: மதுரை பாரப்பத்​தி​யில் நாளை நடக்கும் விஜய் கட்​சி​யின் மாநில மாநாட்​டுக்​கான பணி​கள் இறு​திக்​ கட்​டத்தை எட்டியுள்ளன. மாநாட்டு திடல் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளது. மதுரை-தூத்​துக்​குடி சாலை​யில் உள்ள பாரப்பத்​தி​யில் தவெகவின் 2-வது மாநில மாநாடு நாளை (ஆக.21) நடக்​கிறது.

சுமார் 500 ஏக்​கர் பரப்​பள​வில் எல்​இடி திரைகளு​டன் கூடிய டிஜிட்​டல் வடிவி​லான மேடை, பார்​வை​யாளர் கேலரி​கள், வாகன பார்க்கிங், மாநாட்டு திடலை சுற்​றி​லும் கட்​சிக் கொடி, தோரணங்​கள், பதாகைகள், தற்​காலிக கழிப்​பறை, குடிநீர், மருத்​துவ முகாம், ஆம்​புலன்ஸ் உள்​ளிட்ட அடிப்​படை வசதி​கள், திடலைச் சுற்​றி​லும் வண்ண மின் விளக்​கு​கள் என மாநாடுக்​கான பல்​வேறு ஏற்​பாடு​களும் இறு​திக்​கட்​டத்தை எட்​டி​யுள்​ளன.

கட்​சி​யின் பொதுச்செய​லா​ளர் ஆனந்த் தலை​மை​யில், மதுரை மாவட்​டச் செய​லா​ளர்​கள் கல்​லாணை, தங்​கப்​பாண்டி உள்​ளிட்​டோர் மாநாட்​டுப் பணி​யில் மும்​முர​மாக ஈடு​பட்​டுள்​ளனர். மாநாட்​டுத் திடலை பார்​வை​யிட்ட மதுரை எஸ்​.பி. அரவிந்த், மாநாட்​டுக்​கான பாது​காப்​பு, நெரிசலை தவிர்க்​கும் வழித்​தடங்​கள் குறித்து அதிகாரி​களு​டன் ஆய்வு மேற்​கொண்​டார். மாநாட்டு பாது​காப்பு பணியில் 3,000-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் ஈடு​படு​கின்​றனர்.



By admin