• Wed. Apr 2nd, 2025

24×7 Live News

Apdin News

மதுரையில் ரவுடி கூட்டாளி சுட்டுக் கொலை – என்ன நடந்தது? இன்றைய முக்கிய செய்திகள்

Byadmin

Apr 1, 2025


மதுரையில் ரவுடியின் கூட்டாளி என்கவுன்டரில் சுட்டுக் கொலை - இன்றைய முக்கியச் செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

இன்றைய ( 01/04/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

மதுரையில் பிரபல ரவுடி வெள்ளக்காளியின் நெருங்கிய கூட்டாளி சுபாஷ் சந்திர போஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தி இந்து தமிழ்திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில், “மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வி.கே குருசாமி, ராஜபாண்டியன். உறவினர்களான இவர்களுக்கு இடையே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முன்பகை ஏற்பட்டது. இதன் காரணமாக இரு தரப்பிலும் கடந்த 22 ஆண்டுகளில் 20க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் கடந்த 22ஆம் தேதி வி.கே. குருசாமியின் சகோதரி மகன் காளீஸ்வரன் எட்டு பேர் கொண்ட கும்பலால வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக பிரபல ரவுடி வெள்ளக்காளியின் தாயார் உள்பட 7 பேரை போலீஸ் தனிப்படை தேடி வந்தது,” என்று கூறப்பட்டுள்ளது.

By admin