• Sun. Oct 26th, 2025

24×7 Live News

Apdin News

மதுரை: நாயக்க மன்னர்கள் காலத்தில் நடந்த 2 விசித்திர நிகழ்வுகள் என்ன? முழு பின்னணி

Byadmin

Oct 26, 2025


மதுரை, வரலாறு, நாயக்கர் ஆட்சி

மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இரண்டு முறை விசித்திரமான சம்பவங்கள் நடந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் பதிவு செய்கின்றன. ஒரு முறை வடக்கு திசையிலிருந்து ஒரு தெய்வீகக் குழந்தை வருமென்றும் அது மக்களை மீட்குமென்றும் தகவல்கள் பரவின. இரண்டாவது, நிகழ்வு சற்று விபரீதமானதாக இருந்தது. இந்த இரு நிகழ்வுகளும் எப்படி நடந்தன? அதற்குப் பிறகு என்ன நேர்ந்தது?

மதுரையில் இருந்த சுல்தானகம், சிக்கந்தர் ஷாவின் வீழ்ச்சிக்குப் பிறகு சிதைந்துபோனது. சிக்கந்தர் ஷாவின் தோல்விக்குப் பிறகு கி.பி. 1371-இல் இருந்து விஜயநகர பேரரசின் பிரதிநிதிகள் மதுரையை ஆட்சிசெய்ய ஆரம்பித்தனர். பதினாறாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் விஸ்வநாத நாயக்கர் விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியாக மதுரையை ஆட்சிசெய்யத் துவங்கினார்.

அவரோடு சேர்த்து மொத்தம் 13 நாயக்க மன்னர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதி வரை மதுரையை ஆட்சிசெய்தனர். இந்த 13 மன்னர்களில் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் அவருடைய பேரனான சொக்கநாத நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் இந்த விசித்திர சம்பவங்கள் நடந்தன. இந்த இரண்டு நிகழ்வுகளையும் ஜே.எச். நெல்சன் எழுதிய The Madura Country: A Manual நூல் விவரிக்கிறது.

மதுரை, வரலாறு, நாயக்கர் ஆட்சி

பட மூலாதாரம், JH Nelson

மதுரையை ஆட்சி செய்த ஆறாவது நாயக்க மன்னராக இருந்தவர் முத்து வீரப்ப நாயக்கர். இவருக்கு சந்ததி இல்லாத காரணத்தால் அவருடைய தம்பியான திருமலை சேவரி நாயனி அய்யாலுகாரு என்ற திருமலைக்கு 1623-ஆம் ஆண்டில் முடிசூட்டப்பட்டது. மதுரை நாயக்க மன்னர் மரபில் ஏழாவது மன்னராக இருந்த திருமலை மன்னர்தான், இந்த மரபிலேயே மிக புகழ் மிக்க மன்னராக பின்னாளில் உருவெடுத்தார். அவர் மன்னராக முடிசூடியபோது தலைநகரம் திருச்சியில் இருந்தது. சில ஆண்டுகளில் அதனை மதுரைக்கு மாற்றினார் திருமலை மன்னர்.



By admin