• Sat. Oct 11th, 2025

24×7 Live News

Apdin News

மதுரை: போலீஸ் காவலில் இருந்த பட்டியல் சாதி இளைஞர் மரணத்தில் என்ன நடந்தது?

Byadmin

Oct 10, 2025


தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்த தினேஷ் குமார்.

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்த தினேஷ் குமார்.

“இருபதாயிரம் ரூபாய் சம்பளத்தில் சமீபத்தில்தான் வேலைக்குச் சேர்ந்தான். குடும்பத்தைக் காப்பாற்றுவான் என நினைத்தோம். விசாரணை என்ற பெயரில் என் மகனை போலீஸ் கொன்றுவிட்டது. என் மகனின் சாவுக்கு நியாயம் வேண்டும்” எனக் கூறியபடி கதறியழுகிறார், முத்துலட்சுமி.

தனது மகன் தினேஷ்குமாரை விசாரணைக்கு அழைத்துச்சென்ற காவல் துறையினர் கொன்றுவிட்டதாக கூறுகிறார் முத்துலட்சுமி.

ஆனால், ‘காவல்துறை கைது செய்துவிடுமோ?’ என்ற அச்சத்தில் கால்வாயில் விழுந்து தினேஷ்குமார் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை கூறுகிறது.

இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக, காவல் ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



By admin