• Fri. Jan 9th, 2026

24×7 Live News

Apdin News

‘மதுரோ சாயி பாபாவின் பக்தர்தான்’ – புட்டபர்த்தி ஆசிரமம் கூறியது என்ன?

Byadmin

Jan 8, 2026


மதூரொ புட்டபர்த்தி சாயிபாபாவை சந்தித்த போது எடுத்த புகைபடம்

பட மூலாதாரம், satyasai.org

படக்குறிப்பு, மதுரோ (வட்டத்தில் இருப்பவர்)

    • எழுதியவர், துளசி பிரசாத் ரெட்டி
    • பதவி, பிபிசிக்காக

“ஆம்.. மதுரோ சத்ய சாயி பக்தர் தான். நிக்கோலஸ் மதுரோ மற்றும் சிலியா புளோரஸ் (அவரது மனைவி) ஆகியோர் 2005-ஆம் ஆண்டு புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாயிபாபா ஆசிரமத்திற்கு வந்து பாபாவின் ஆசீர்வாதங்களைப் பெற்றனர்” என்று புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாயி சென்ட்ரல் டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் ஆர்.ஜே. ரத்னாகர் பிபிசியிடம் தெரிவித்தார்.

வெனிசுவேலா தலைநகர் கராகஸ் மீது ஜனவரி 3-ஆம் தேதி அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தி அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸை சிறைபிடித்தன. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பிறகு வெனிசுவேலா துணை அதிபர் தற்போது அதிபராக பதவியேற்றுள்ளார்.

இந்தச் சூழலில், கடந்த காலத்தில் மதுரோ ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள புட்டபர்த்திக்கு வந்து சத்ய சாயிபாபாவைத் தரிசித்தது இந்தியாவில் விவாதமாக மாறியுள்ளது.

“நிக்கோலஸ் மதுரோ புட்டபர்த்தி சாயிபாபாவைத் தரிசித்தது உண்மைதான்” என்று ரத்னாகர் பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.

”நிக்கோலஸ் மதுரோ மற்றும் சிலியா புளோரஸ் 2005-இல் புட்டபர்த்தி சத்ய சாயிபாபா ஆசிரமத்திற்கு வந்து பாபாவின் ஆசீர்வாதங்களைப் பெற்றனர். இங்கு ஏராளமான வெளிநாட்டு பக்தர்கள் வருவார்கள். அந்த வெளிநாட்டு பக்தர்கள் யார் என்பதை அவர்கள் தெரிவித்தாலொழிய நமக்குத் தெரியாது.”

By admin