• Sat. Feb 1st, 2025

24×7 Live News

Apdin News

மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு கருப்​பு கொடி காட்ட முயற்சி: முன்னெச்​சரிக்கையாக காங்​கிரஸ் கட்சி​யினர் கைது | Attempt to show black flag to Union Minister Amit Shah

Byadmin

Feb 1, 2025


மாமல்​லபுரம்: தனியார் நட்சத்திர சொகுசு விடு​தி​யில் நடைபெற்ற முன்​னாள் குடியரசு துணை தலைவர் வெங்​கய்ய நாயுடு​வின் பேரன் திருமண விழா​வில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக, கருப்​புக்​கொடி காட்டு​வதற்காக தனியார் விடு​தி​யில் தயாராக இருந்த காங்​கிரஸ் கட்சி​யின் தேசிய செயலாளர் விஸ்​வநாதன் உட்பட 2-க்​கும் மேற்​பட்ட காங்​கிரஸ் கட்சி​யினரை முன்னெச்​சரிக்கையாக போலீ​ஸார் கைது செய்​தனர்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், மாமல்​லபுரத்​தில் உள்ள தனியார் நட்சத்திர சொகுசு விடு​தி​யில் முன்​னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்​கய்ய நாயுடு​வின், பேரன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்​றது. இதில், குடியரசு துணை தலைவர் ஜகதீப்​தன்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் 8 மாநில ஆளுநர்​கள், மத்திய அமைச்​சர்கள் என பலர் கலந்​து​கொண்​டனர். முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னையி​லிருந்து கிழக்கு கடற்கரை சாலை மார்க்​கமாக விழா நடைபெற்ற சொகுசு விடு​திக்கு வந்தார்.

இதனால், திரு​வான்​மியூர்​-​மாமல்​லபுரம் இடையேயான ஈசிஆர் சாலை​யில் ஒரு சில இடங்​களில் தாம்​பரம் மாநகர காவல் ஆணையர் உத்தர​வின்​பேரில், வாகன போக்கு​வரத்து மாற்றம் செய்​யப்​பட்​டிருந்​தது. மேலும், மாற்று வழியாக ஓஎம்ஆர் சாலை வழியாக வாகனங்கள் பூஞ்​சேரி வந்து ஈசிஆர் சாலை​யில் சென்றன.

மேலும், மத்திய அமைச்​சர்கள் உட்பட முக்​கியத் தலைவர்கள் விழா​வில் பங்கேற்​ற​தால், ஈசிஆர் சாலை மற்றும் கடற்கரை பகுதி​களில் ஏராளமான போலீ​ஸார் பாது​காப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்​தப்​பட்​டனர்.

இந்நிலை​யில், விழா​வில் பங்கேற்​ப​தற்காக நிகழ்ச்சி நடைபெறும் சொகுசு விடு​திக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர இருந்த சில மணி நேரத்​துக்கு முன்​பாக, உள்துறை அமைச்​சருக்கு எதிராக கருப்​புக்​கொடி காட்டு​வதற்காக அருகில் உள்ள தனியார் விடு​தி​யில் தங்கி​யிருந்த காங்​கிரஸ் கட்சி​யின் தேசிய செயலாளர் மற்றும் அக்கட்​சி​யின் தெலங்​கானா மாநில பொறுப்​பாள​ருமான விஸ்​வநாதன் தலைமையிலான 20-க்​கும் மேற்​பட்ட காங்​கிரஸ் கட்சி​யினரை, பாது​காப்பு பணியில் ஈடுபட்​டிருந்த போலீ​ஸார் ​முன்னெச்​சரிக்கை நட​வடிக்கையாக கைது செய்து, வாக​னத்​தில் அழைத்து சென்​றனர்.



By admin