0
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் மத்திய ஆசிய கரபந்தாட்ட சங்க (Central Asia Volleyball Association – CAVA) 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்ட சம்பயின்ஷிப்பின் மூன்றாம் நாளான இன்று கிர்கிஸ்தானை அதிரவைத்து 3 நேர் செட்களில் இலங்கை அபார வெற்றியீட்டியது.




முழுப் போட்டியிலும் மிகத் திறமையான வியூகங்களுடன் விளையாடிய இலங்கை வீராங்கனைகள் முதல் தடவையாக இந்த சுற்றுப் போட்டியில் ஆக்ரோஷத்துடனும் வெற்றிபெற வேண்டும் என்ற வைராக்கியத்துடனும் விளையாடினர்.
முதலாவது செட்டில் 25 – 19 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதும் இலங்கை வீராங்கனைகளின் முகங்களில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் காண முடிந்தது.


இரண்டாவது செட்டில் இரண்டு அணிகளும் சரி சமமாக மோதிக்ககொண்டவண்ணம் இருந்தன. இறுதியில் சமநிலை முறிப்பு முறையில் 27 – 25 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றது.
மூன்றாவது செட்டின் கடைசிக் கட்டத்தில் புத்திசாதுரியத்துடன் விளையாடி இலங்கை 25 – 22 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று போட்டியை 3 – 0 என்ற நேர் செட்களில் கைப்பற்றியது.