• Sat. Jun 14th, 2025

24×7 Live News

Apdin News

மனிதத் தலையுடன் மயான வேட்டை நிகழ்வு – சுடலைமாடன் கோவில் திருவிழாவின் வரலாறு என்ன?

Byadmin

Jun 10, 2025


நெல்லை சுடலைமாடசாமி

பட மூலாதாரம், Facebook/ கோவில்பட்டி புதுக்கிராமம் வேம்படி சுடலைமாடசாமி திருக்கோவில்

எச்சரிக்கை : இந்த செய்தியில் இடம்பெற்றிருக்கும் விவரணைகள் சிலருக்கு சங்கடம் தரலாம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள உப்பூர் கிராமத்தில் ஊர்க்காடு சுடலைமாடசாமி கோயில் விழாவில் இறந்தவரின் தலை, கை, கால்கள் கொண்டு சாமியாடிகள் பங்கேற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த கோயிலில் நடைபெற்ற ‘சாமக் கொடை’ நிகழ்வின் போது, சுடுகாட்டுக்கு சுடலைமாடசாமி ஆடுபவர் வேட்டைக்குச் செல்வார். பொதுவாக அவ்வாறு வேட்டைக்குச் செல்லும் சாமியாடிகள் ஒன்றிரண்டு எலும்பு துண்டுகள், அல்லது சில நேரங்களில் எதுவும் இல்லாமல் திரும்பி வருவர்.

ஆனால் சனிக்கிழமை நடைபெற்ற வேட்டையில் சாமியாடி ஒருவர் இறந்தவரின் தலையை எடுத்துக் கொண்டு வந்திருந்தார். முழுவதும் எரிக்கப்படாத நிலையில் இருந்த அந்த உடல் பாகத்தை அவர் கையில் பிடித்து ஆடியுள்ளார். இதே போன்று மற்ற சாமியாடிகள் கையில் இறந்தவரின் கை, கால்கள் இருந்துள்ளன.

By admin