• Mon. Feb 9th, 2026

24×7 Live News

Apdin News

மனிதன் – காட்டுயிர் மோதல் பற்றிய தமிழ்நாடு வனத்துறை அறிக்கை பற்றிய ஓர் அலசல்

Byadmin

Feb 9, 2026


யானை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் காட்டுயிர்கள் தாக்கி 685 பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றில் யானைகள் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே 522.

இந்தத் தகவல்களைத் தொகுத்துள்ள தமிழக வனத்துறை, கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஜூலை வரையிலும் இயற்கையாக 1,586 யானைகளும், இயற்கைக்கு மாறான பிற காரணங்களால் 179 யானைகளும் இறந்திருப்பதையும் கண்டறிந்துள்ளது. இதே கால கட்டத்தில் மனித செயல்பாடுகளால் 27 புலிகளும், 37 சிறுத்தைகளும் உயிரிழந்துள்ளன.

வனத்துறை நடவடிக்கைகளால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு வருவதாக பிபிசி தமிழிடம் விளக்கினார் தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு.

ஆனால், காடுகளின் பரப்பை அதிகப்படுத்தவும், துண்டாடப்பட்ட காடுகளை இணைக்கவும், முக்கியமாக யானை வழித்தடங்களை முழுமையாக மீட்பதும்தான் இதற்கு நிரந்தரத் தீர்வு என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.

எந்தெந்த காட்டுயிர் தாக்கி எவ்வளவு பேர் இறந்தார்கள்?

தமிழகம் முழுவதும் நடந்து வரும் மனித-காட்டுயிர் மோதல்கள் தொடர்பான பல்வேறு தரவுகளையும் சேகரித்து ஒருங்கிணைந்த ஒரு தகவல் தொகுப்பை வனத்துறை உருவாக்கியுள்ளது.

By admin