• Wed. Jun 4th, 2025

24×7 Live News

Apdin News

மனிதர்களைப் போன்று யானைகளை அடையாளம் காண முடியுமா? – புராஜக்ட் தடம் திட்டம் செய்யவிருப்பது என்ன?

Byadmin

Jun 2, 2025


பிராஜெக்ட் தடம், கோயம்புத்தூர், வனத்துறை, யானை-மனித மோதல்

யானை-மனித மோதலைத் தடுக்கும் முயற்சியாக, தமிழக வனத்துறையின் ‘ப்ராஜெக்ட் தடம்’ (Project Thadam) திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து யானைகளையும் அடையாளம் கண்டு தனித்தனி எண்கள் கொடுக்கும் பணி துவங்கியுள்ளது.

இதன் மூலமாக, தமிழகத்தில் யானை-மனித மோதலுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியுமென்று வனத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். வனத்துறையின் இந்த முயற்சியை சூழலியல் அமைப்பினர் வரவேற்கின்றனர்.

யானை தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதில் ஒடிஷா முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த ஆண்டில் மட்டும் 154 பேர் யானை தாக்கி பலியாகியுள்ளனர். இந்த பட்டியலில் தமிழகம் ஐந்தாமிடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டில் தமிழகத்தில் யானை தாக்கி 61 பேர் மரணமடைந்துள்ளனர். ஆனால், நாட்டிலேயே யானை-மனித மோதல் அதிகம் நடக்கும் பகுதியாக கோவை வனக்கோட்டம் இருப்பதாக அமெரிக்காவின் ஹார்வர்டு மற்றும் இண்டியானா பல்கலைக்கழக மாணவர்கள், 2006 முதல் 2018 வரை 12 ஆண்டுகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக கடந்த ஆண்டில் அறிக்கை வெளியானது.

By admin