• Wed. Apr 2nd, 2025

24×7 Live News

Apdin News

மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கூறி கேலிக்கு ஆளான விஞ்ஞானி அதை நிரூபித்தது எப்படி?

Byadmin

Apr 1, 2025


மனித இனம், தென் ஆப்பிரிக்கா

பட மூலாதாரம், Science Photo Library

படக்குறிப்பு, அந்தக் குழந்தைக்கு 3-4 வயது இருக்கும். அது கழுகின் தாக்குதலால் உயிரிழந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த ஒரு குழந்தையின் புதைபடிமம் குறித்து ஓர் ஆய்வுக்கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரை, மனித பரிணாமம் குறித்த நமது புரிதலை முற்றிலுமாக மாற்றத் தொடங்கியது.

ஆனால், அந்த மாற்றம் அவ்வளவு எளிதில் நடக்கவில்லை.

அந்தக் கட்டுரையின் ஆசிரியர் ரேமண்ட் டார்ட், தனது வீட்டில் நடந்த நண்பரின் திருமணத்தன்று அதைப் புதைபடிமத்தைக் கண்டுபிடித்தார். அது, சந்தேகத்திற்கு இடமின்றி இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிமங்களுள் முக்கியமான ஒன்றாக மாறியது.

மணமகன் அங்கு வந்து சேரவிருந்த நேரம் அது. அவர்தான் மாப்பிள்ளைத் தோழராக இருந்தார். அப்போது, இரண்டு பெரிய பெட்டிகளுடன் ஒரு தபால்காரர் அங்கு வந்தார். அது நிச்சயமாக பரிசுகள் அல்ல என்று அவற்றைப் பார்த்தபோதே ரேமண்டுக்கு புரிந்தது. அவர் ‘அட்வென்ச்சர்ஸ் ஆஃப் தி மிஸ்ஸிங் லிங்க்’ என்ற 1959ஆம் ஆண்டு வெளியான தனது நினைவுக் குறிப்பில் இதுகுறித்துக் குறிப்பிட்டுள்ளார்.

By admin