• Sun. Apr 27th, 2025

24×7 Live News

Apdin News

மனித உடலின் மின்சாரத்தால் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்படுமா?

Byadmin

Apr 27, 2025


மனித உடலில் உள்ள நிலை மின்சாரத்தால் பட்டாசு வெடிக்குமா? அமைச்சர் சி.வி.கணேசன் கூறியது உண்மையா?

பட மூலாதாரம், CV Ganesan/Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்

“காற்று, தண்ணீர் ஆகியவற்றில் இருப்பதுபோல மனித உடலிலும் மின்சாரம் உள்ளது. பட்டாசு தயாரிக்கப் பயன்படும் ரசாயனங்களில் மனித உடலில் உள்ள மின்சாரம் கலக்கும்போது சில நேரங்களில் தீ விபத்து ஏற்படுகிறது.” – சட்டப்பேரவையில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறிய வார்த்தைகள் இவை.

ஏப்ரல் 22ஆம் தேதி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையின்போது, ம.தி.மு.க எம்.எல்.ஏ ரகுராமன் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறாக சி.வி.கணேசன் பதில் அளித்திருந்தார்.

மனித உடலில் உள்ள மின்சாரத்தால் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்படுமா? அமைச்சர் கூறுவதில் உண்மை உள்ளதா?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1,200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இவற்றில் சாத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளில் மட்டும் அதிகளவில் பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.

By admin