• Tue. May 20th, 2025

24×7 Live News

Apdin News

மன்சிங்: 4 மாநிலங்களில் ராணுவம், காவல்துறையை திணறடித்த இந்திய ராபின்ஹூட் யார்?

Byadmin

May 20, 2025


மன்சிங், கொள்ளையன் மன்சிங், வரலாறு,

பட மூலாதாரம், Rupa Publications

மத்தியப் பிரதேசத்தின் பிந்த் பகுதியில் ஒரு பிரபலமான கதை இருந்தது. ஒரு வறட்சியான காலத்தில், ராம்பூர் கிராமத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் எல்லாம் கருகிப் போகின.

திடீரென ஒரு நாள், 8 மாட்டு வண்டிகள் அந்த கிராமத்திற்கு வந்தன. அந்த மாட்டு வண்டிகளில் சாக்குகள் அடுக்கப்பட்டிருந்தன. அதில் கோதுமை நிரப்பப்பட்டிருந்தது. ராம்பூர் மக்களிடம் அதனை ஒப்படைத்த மாட்டுவண்டிக்காரர், இது ‘மன்சிங்கிடம் இருந்து வந்தது’ என்று மட்டும் கூறினார்.

கென்னத் ஆண்டர்சன் தன்னுடைய, டேல்ஸ் ஆஃப் மன்சிங், கிங் ஆஃப் இந்தியன் டகோய்ட்ஸ் என்ற புத்தகத்தில், “அந்த நேரத்தில் மன்சிங்கை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துக் கொடுத்தால் அவர்களுக்கு ரூ. 15 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருந்தது. 200 பேரை கொலை செய்ததாகவும், பல இடங்களில் கொள்ளை அடித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இருப்பினும் அவரைப் பற்றி தகவல் அளிக்க யாரும் முன்வராத காரணத்தால், அவரை யாராலும் பிடிக்க இயலவில்லை,” என்று எழுதியிருந்தார்.

ராம்பூர் மக்களுக்கு கோதுமை மூட்டைகளை கொடுத்துச் சென்ற மாட்டுவண்டிக்காரர்களிடம் காவல்துறையினர் பல விசாரணைகளை மேற்கொண்டனர்.

By admin