• Tue. Dec 16th, 2025

24×7 Live News

Apdin News

மன்னாரில் 1,292 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றல்!

Byadmin

Dec 16, 2025


மன்னார் – எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் பீடி இலைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

1,292 கிலோ கிராம் நிறையுடைய பீடி இலைகள் அடங்கிய 40 பொதிகளே கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

By admin