• Sun. Mar 30th, 2025

24×7 Live News

Apdin News

மம்மூட்டிக்காக சபரிமலையில் பூஜை செய்த மோகன்லால்: சர்ச்சையானது ஏன்? – இன்றைய டாப் 5 செய்திகள்

Byadmin

Mar 27, 2025


 டாப் 5 செய்திகள்

பட மூலாதாரம், x/@mammukka

இன்றைய தினம் (27/03/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை பார்க்கலாம்.

கேரளா சபரிமலை கோவிலில் சக நடிகர் மம்மூட்டிக்காக நடிக ர் மோகன்லால் பிரார்த்தனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மம்மூட்டியின் சம்மதத்துடன் இந்த செயல் செய்யப்பட்டிருந்தால், அது இஸ்லாமிய கொள்கைகளுக்கு முரணானது என்று, இஸ்லாமிய சமூகத் தலைவர்கள் சிலர் கூறியதாக, ஆங்கில நாளிதழான ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

“கடந்த மார்ச் 18 ஆம் தேதி அன்று நடிகர் மோகன்லால், நடிகர் மம்மூட்டி சார்பாக சபரிமலை கோவிலில் ‘உஷா பூஜை’ நடத்தியபோது இந்த சர்ச்சை எழுந்தது. மம்மூட்டியின் பெயர் மற்றும் அவர் பிறந்த நட்சத்திரம் (விசாகம்) உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய காணிக்கை ரசீது வைரலானது. இந்த செயலை இரண்டு நடிகர்களுக்கும் இடையிலான நட்பின் பிரதிபலிப்பாக பலர் பார்த்தாலும், சில அமைப்புகள் இதனை விமர்சித்தன. ஜமாத்-இ-இஸ்லாமியுடன் தொடர்புடைய மத்யமம் என்ற நாளிதழின் முன்னாள் ஆசிரியரான ஓ. அப்துல்லா, இந்த நிகழ்வை சமூக ஊடகங்களில் விமரசித்தார்”, என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

“மம்மூட்டி தெரிந்தே இந்த பிரார்த்தனையை செய்ய சொல்லி இருந்தால், அவர் இஸ்லாமிய சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும், ஆனால் மோகன்லால் தானாக முன்வந்து மம்மூட்டிக்காக இவ்வாறு செய்திருந்தால் அதில் பிரச்னை இல்லை என்று அப்துல்லா தெரிவித்தார். இருப்பினும், முஸ்லிம் சமூகத்துக்குள் இருந்து வந்த எதிர்வினைகளைத் தொடர்ந்து, அப்துல்லா தனது பதிவை நீக்கினார்”, என்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ தெரிவித்துள்ளது.

By admin