• Tue. Oct 15th, 2024

24×7 Live News

Apdin News

மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்களின் தற்போதைய நிலை என்ன?

Byadmin

Oct 15, 2024


மாஞ்சோலை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மாஞ்சோலை. சிங்கம்பட்டி ஜமீனிடமிருந்து மேற்கு மாஞ்சோலை என்ற அந்த மலை பகுதியை ‘பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்ற நிறுவனம் 99 வருடத்திற்கு குத்தகைக்கு எடுத்து அதில் தேயிலைத் தோட்டம் நடத்தி வந்தது.

அந்த குத்தகை வரும் 2028-ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறது. இருப்பினும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தேயிலைத் தோட்டப்பணிகளை நிறுத்தி அங்கே உள்ள பணியாளர்களை வெளியேறுமாறு அறிவித்தது அந்த நிறுவனம்.

நான்கு தலைமுறைகளாக வேலை செய்து வந்த மக்கள் மாஞ்சோலையைவிட்டு வெளியேற வேண்டும் என்று வந்த அந்த செய்தி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் என்று மூன்று மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் அங்கிருந்து வெளியேறத் துவங்கினர்.

By admin