• Mon. Nov 24th, 2025

24×7 Live News

Apdin News

மாணவர்கள் பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றச்சாட்டு

Byadmin

Nov 24, 2025


இந்த தடையை நீக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சூர்யகாந்த், ஜே.எம்.பக்க்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.

மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு: அப்போது யுஜிசி சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இதுதொடர் பான மசோதாக்களுக்கு கெடு விதித்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க வேண்டும்’’ என்றார். அதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி. வில்சன், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், ‘‘இந்த வழக்குக்கும், மசோதாக்களுக்கு கெடு விதித்த விவகாரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

By admin