• Sat. Apr 19th, 2025

24×7 Live News

Apdin News

மாநில சுயாட்சி: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் என்ன பேசினார்? மூவர் குழுவின் பின்னணி என்ன?

Byadmin

Apr 15, 2025


திமுக, தமிழ்நாடு, நீட், மத்திய அரசு

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற்றிட உரிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் மத்திய – மாநில அரசுகள் இடையிலான உறவுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை அளிக்கவும் மூன்று பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு. இதன் பின்னணி என்ன?

சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க் கிழமையன்று சட்டப்பேரவைக் கூட்டம் துவங்கியதும் 110வது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில், மத்திய அரசு தொடர்ந்து மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பறித்து வருவதாகவும் மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார். மத்திய – மாநில அரசுகள் இடையிலான உறவுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை அளிக்க மூன்று பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை அமைப்பதாக அவர் அறிவித்திருக்கிறார்.

மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்களைப் பெறுவதற்கான முந்தைய நடவடிக்கைகள்

திமுக, தமிழ்நாடு, நீட், மத்திய அரசு

பட மூலாதாரம், Facebook

முதலமைச்சர் தனது உரையில், மாநில சுயாட்சி, மாநிலங்களின் அதிகாரம் குறித்து இதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பட்டியலிட்டார்.

By admin