• Sat. Aug 2nd, 2025

24×7 Live News

Apdin News

மாலேகான் குண்டுவெடிப்பு: 17 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த தீர்ப்பு.. வழக்கின் பின்னணி என்ன?

Byadmin

Aug 1, 2025


மாலேகான் குண்டுவெடிப்பு

பட மூலாதாரம், Getty Images

17 ஆண்டுகளுக்குப் பிறகு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவித்துள்ளது சிறப்பு என்ஐஏ நீதிமன்றம்.

சுமார் 17 ஆண்டுகளுக்கு முன் 2008ஆம் ஆண்டில் நடந்த மாலேகான்குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவர் சாத்வி பிரக்யா, லெப்டினன்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித் ஆகியோர் பற்றி அதிகம் பேசப்பட்டது. சாத்வி பிரக்யா போபாலில் எம்.பியாக இருந்தார்.

2008ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் உள்ள பள்ளிவாசல் அருகே நின்றிருந்த பைக்கில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

By admin