• Sat. Jun 7th, 2025

24×7 Live News

Apdin News

மாவை தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார் | கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Byadmin

Jun 7, 2025


அரசியல் கட்சியில் மாறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும். இவ்வாறான மாறுப்பட்ட தீர்மானங்களால் மாவை .சேனாதிராசா பாதிக்கப்பட்டிருக்கலாம். கட்சியின் தீர்மானத்துக்கு துணை சென்றதாக அவரும் அடிபட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கலாம். என்னை பொறுத்தவரையில் அவர் தமிழ்தேசிய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06)  நடைபெற்ற  அனுதாப பிரேரணையில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு  அவர் மேலும் உரையாற்றியதாவது,

2001 ஆம் ஆண்டு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமரர் மாவை. சேனாதிராசாவுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தமிழர்களின் அரசியல் உரிமை மற்றும் விடுதலைக்காக அவர் குரல் கொடுத்தார்.

மாவை. சேனாதிராசா தன்னை ஒரு பற்றாளராக அடையாளப்படுத்திக் கொண்டு  தமிழர்களின் விடுதலை அரசியலுக்கான தன்னை அர்ப்பணித்தார்.

2001 முதல் 2008 ஆம் ஆண்டு  வரையான காலப்பகுதியில் நாங்கள் கொள்கை ரீதியில் முரண்பட்டுக் கொண்டதில்லை. தமிழ் மக்களின் உரிமைகளை மையப்படுத்தியதாக அவரது அரசியல் செயற்பாடுகள் காணப்பட்டன.

அரசியல் கட்சியில் மாறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும். இவ்வாறான மாறுப்பட்ட தீர்மானங்களால் மாவை .சேனாதிராசா பாதிக்கப்பட்டிருக்கலாம்.

கட்சியின் தீர்மானத்துக்கு துணை சென்றதாக அவரும் அடிபட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கலாம். என்னை பொறுத்தவரையில் அவர் தமிழ்தேசிய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

தமிழ் தேசியம் என்ற நிலைப்பாடு மற்றும் விடுதலை ஆகியவற்றை எந்நிலையிலும் மையப்படுத்தி செயற்பட்டார். எந்நிலையிலும் அவர் இந்த அடிப்படை கொள்கைகளுக்கு முரணாக செயற்படவில்லை. இவரது இழப்பை இலங்கை தமிழரசுக் கட்சியால் ஒருபோதும் ஈடு செய்ய முடியாது.

இந்த நாட்டின் அ ரச நிர்வாகத்தால் மாவை. சேனாதிராசா பாதிக்கப்பட்ட நிலையிலும் நாட்டையும், நாட்டு மக்களையும் ஒருபோதும் வெறுக்கவில்லை.

தமிழ்களின் விடுதலைக்காக குரல் கொடுத்துக்கொண்டு, நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் ஒத்துழைப்பு வழங்கினார்.ஆகவே இவரது இழப்பு கட்சிக்கு மாத்திரமல்ல நாட்டுக்கும் பேரிழப்பாகும்.

இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது, உரிமைகள் அனைவருக்கும் உண்டு என்ற சிந்தனையில் இருந்துக் கொண்டு செயற்பட்டார்.  இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்றார்.

By admin