• Fri. Oct 3rd, 2025

24×7 Live News

Apdin News

மிங் குடும்பம்: மியான்மரில் இருந்து உலகெங்கிலும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குடும்பத்துக்கு மரண தண்டனை

Byadmin

Oct 1, 2025


மிங் குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் 39 பேருக்கு திங்கட்கிழமை அன்று தண்டனை விதிக்கப்பட்டது.

பட மூலாதாரம், CCTV

படக்குறிப்பு, மிங் குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் 39 பேருக்கு திங்கட்கிழமை அன்று தண்டனை விதிக்கப்பட்டது.

    • எழுதியவர், ஜோனதன் ஹெட்
    • பதவி, தென்கிழக்கு ஆசியா செய்தியாளர்
    • எழுதியவர், டெஸ்ஸா வாங்
    • பதவி, ஆசிய டிஜிட்டல் செய்தியாளர்

மியான்மரில் மோசடி மையங்களை (online scam centre) நடத்தி வந்த ஒரு பிரபல மாஃபியா குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்குச் சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாகச் சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மிங் குடும்பத்தைச் சேர்ந்த டஜன் கணக்கான உறுப்பினர்கள் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, பலருக்கு நீண்ட கால சிறைத் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

சீன எல்லைக்கு அருகில், மியான்மரின் அமைதியான நகரமான லாவ்கைங்கை (Laukkaing) சூதாட்டம், போதைப்பொருள் மற்றும் மோசடி மையங்களின் மையமாக மாற்றிய நான்கு குடும்பங்களில் ஒன்றுக்காக இந்த மிங் குடும்பம் செயல்பட்டு வந்தது.

இதையடுத்து, மியான்மர் கடும் நடவடிக்கைகளை எடுத்து, இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த பலரை 2023-ஆம் ஆண்டில் கைது செய்து சீன அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.

By admin