• Mon. Oct 27th, 2025

24×7 Live News

Apdin News

மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து உயிரிழப்பது ஏன்? ஆள் பற்றாக்குறை காரணமா?

Byadmin

Oct 27, 2025


மின்வாரிய ஊழியர்கள் உயிரிழப்பு

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, ஆள் பற்றாக்குறை காரணமாக ஆண்டுக்கு சுமார் 40 ஊழியர்கள் வரை உயிரிழப்பதாக, மின் ஊழியர் சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன

“கணவர் இறந்துவிட்டதால் மகனை நம்பித் தான் வாழ்ந்து வந்தேன். ஐ.டி.ஐ எலக்ட்ரீஷியன் படித்துவிட்டு கீரனூர் மின்வாரியத்தில் தினசரி சம்பளத்துக்கு வேலைக்குப் போனான். மழை பெய்தாலும் நள்ளிரவில் கூப்பிடுவார்கள். இரவு பகல் பார்க்காமல் வேலை பார்த்தவனைக் கொன்றுவிட்டார்கள்” எனக் கூறி அழுகிறார், ஆனந்தி.

கடந்த 13 ஆம் தேதியன்று மின் ஊழியர்களின் அலட்சியத்தால் தனது மகன் பிரவீன்குமார் உயிரிழந்துவிட்டதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ஆள் பற்றாக்குறை காரணமாக ஆண்டுக்கு சுமார் 40 ஊழியர்கள் வரை உயிரிழப்பதாக, மின் ஊழியர் சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன. பாதுகாப்பு குறைபாட்டால் மின்வாரியத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கிறதா?

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் உள்ள கரடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். 27 வயதான இவர் கீரனூர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.



By admin