பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மார் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மருத்துவக் குழுவொன்றை, மியன்மாருக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மியன்மார் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் உரிய மருத்துவக் குழுவை அனுப்பிவைக்க தயார் என சுகாதார அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.
தொடர்புடைய செய்தி : மியான்மார் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000ஐ கடந்தது!
களுத்துறை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் கூறினார்.
The post மியன்மாருக்கு விரையும் இலங்கை மருத்துவக் குழுவினர்! appeared first on Vanakkam London.