• Sun. Aug 17th, 2025

24×7 Live News

Apdin News

மீண்டும் டிரம்ப்பை சந்திக்கும் உக்ரேன் ஜனாதிபதி; போர் முடிவுக்கு வருமா?

Byadmin

Aug 17, 2025


உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, எதிர்வரும் திங்கட்கிழமை (18) அமெரிக்கா பயணிக்கவுள்ளார்.

அலாஸ்காவில் இன்று (16) ரஷ்ய – அமெரிக்க அதிபர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் முக்கியத் தகவல்களை டிரம்ப், உக்ரேன் ஜனாதிபதியிடம் தொலைபேசியில் கூறியுள்ளார்.

அத்துடன், உக்ரேன் – ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதிக்க அமெரிக்கா செல்வதாக ஸெலென்ஸ்கி கூறினார்.

அமெரிக்க – உக்ரேன் – ரஷ்ய ஜனாதிபதிகளின் முத்தரப்புச் சந்திப்புக்குத் தயாராயிருப்பதாகவும் அவர் கூறி வருகிறார். ஆனால், ரஷ்யா தயங்குகிறது.

முக்கியமான அம்சங்கள் குறித்து விவாதிக்கத் தலைவர்களின் முத்தரப்புச் சந்திப்பு வழியமைக்கும் என ஸெலென்ஸ்கி கூறுகிறார்.

ரஷ்ய – அமெரிக்க ஜனாதிபதிகளின் சந்திப்பில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த எந்த முடிவும் எட்டப்படவில்லை.

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்கிறது.

By admin