9
பேய் படங்களுக்கும், சுந்தர் சிக்கும் உள்ள வெற்றிகரமான தொடர்பு மீண்டும் தொடர்கிறது. இயக்குநர் சுந்தர் சி கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் வி இசட் துரை இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் சுந்தர் சி கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சி. ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தை மொமண்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜி ஏ ஹரி கிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
ஹாரர் திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்றும் , இப்படத்தில் முன்னணி பொலிவூட் நட்சத்திர நடிகர் நடிக்க உள்ளார் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.