• Thu. Oct 10th, 2024

24×7 Live News

Apdin News

முகமது முய்சு: அன்று இந்தியாவை ‘வெளியேற’ சொன்ன மாலத்தீவு அதிபர் இன்று நட்பு பாராட்டுவது ஏன்?

Byadmin

Oct 10, 2024


இந்தியா - மாலத்தீவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா – மாலத்தீவு இடையே குழப்பமான ராஜ்ஜிய உறவு

நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 7) அன்று இந்தியா வந்து பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் மாலத்தீவு அதிபராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக தற்போது அவர் இந்தியா வந்துள்ளார். சீனாவுடன் முய்சு நெருக்கம் காட்டுவதாக கூறப்பட்ட கருத்து, இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவுகளில் பல ஏற்ற தாழ்வுகள் வர வழிவகுத்தது.

முய்சுவின் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும், என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

“மாலத்தீவின் சமூக, பொருளாதார, மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது,” என்று பிரதமர் மோதியைச் சந்தித்த பிறகு முய்சு கூறினார். “மாலத்தீவிற்கு உதவி தேவைப்படும் காலங்களில் இந்தியா எப்போதும் எங்களுடன் துணை நின்றுள்ளது,” என்றும் அவர் கூறினார்.

By admin