• Mon. Sep 8th, 2025

24×7 Live News

Apdin News

முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்க முடியாது: டிடிவி.தினகரன் திட்டவட்டம் | TTV Dinakaran says palaniswami cannot be accepted as the Chief Ministerial candidate

Byadmin

Sep 8, 2025


மானாமதுரை: நண்​பர் அண்​ணா​மலையே கூறி​னாலும் பழனி​சாமியை முதல்​வர் வேட்​பாள​ராக ஏற்க முடி​யாது என்று அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன் கூறி​னார். சிவகங்கை மாவட்​டம் மானாமதுரை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: என்னை சந்​திக்​கவே தயங்​கும் பழனி​சாமி, எங்​களு​டன் எப்​படி கூட்​டணி சேரு​வார்? அமித்ஷா அனை​வரை​யும் ஓரணி​யில் இணைக்க முயற்​சித்​தார். ஆனால் பலனில்​லை.

அதி​முகவைச் சேர்ந்​தவர்​தான் முதல்​வர் வேட்​பாளர் என்று அமித்ஷா கூறி​னார். அப்​போது, முதல்​வர் வேட்​பாளர் யார் என்​ப​தைப் பொருத்து ஆதரவு அளிப்​போம் என்று நான் கூறினேன். ஓபிஎஸ் செல்​போன் அழைப்பை ஏற்​காமல் தவிர்த்த நயி​னார் நாகேந்திரன், தற்​போது சமரசம் பேசப் போவ​தாகக் கூறு​வது அகங்​காரம், ஆணவத்​தைக் காட்​டு​கிறது.

எனக்​காக தேனி தொகுதியை விட்​டுக்​கொடுத்த ஓபிஎஸ்​-ன் சுய கவுர​வத்​துக்​குப் பாதிப்பு ஏற்​பட்​ட​தால், நான் குரல் கொடுக்கிறேன். எங்​களின் பின்னணி​யில் அண்​ணா​மலை இருப்​ப​தாக அரசி​யல் தெரி​யாதவர்​கள்​தான் கூறு​வர். நாங்​கள் கூட்​ட​ணியி​லிருந்து பிரிந்து செல்ல அண்​ணா​மலை காரணமல்ல. அவர் மாநிலத் தலை​வ​ராக இருந்​த​போது கூட்​டணி கட்​சித் தலை​வர்​களுக்கு உரிய மரி​யாதை அளித்​தார்.

பழனி​சாமி தலை​மையை ஏற்​பது தற்​கொலைக்​குச் சமம். அதி​முக​வுடன், அமமுக தொண்​டர்​கள் இணைந்து செயல்பட மாட்​டார்​கள். அமமுக தொண்​டர்​களின் எதிர்​காலம் கருதி நான் நல்ல முடிவு எடுப்​பேன். தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணியி​லிருந்து ஓபிஎஸ், அமமுக வெளி​யேற நயி​னார் நாகேந்​திரன்​தான் காரணம். பழனி​சாமி மட்​டும் போதும் என்று அவர் கருதுகிறார்.

தமிழக மக்​களின் மனநிலை அவருக்​கும், அவரைச் சார்ந்​தோருக்​கும் புரிய​வில்​லை. எங்​களை அழித்​து​விட்ட நயி​னாரை வெற்​றி​பெறச் செய்ய நாங்​கள் முட்​டாள் அல்ல. நண்​பர் அண்​ணா​மலையே கூறி​னாலும், பழனி​சாமியை முதல்​வர் வேட்​பாள​ராக ஏற்க முடி​யாது. பழனி​சாமியை தவிர வேறு யாரை முதல்​வர் வேட்​பாள​ராக அறி​வித்​தா​லும், நாங்​கள் ஏற்​றுக்​கொள்​வோம்.

எங்​களை விமர்​சிக்​காத வரை, விஜய்யை நாங்​கள் விமர்​சிக்க வேண்​டிய அவசி​யமில்​லை. அவர் மக்​கள் விரும்​பும் நடிகர். அவரைப் பார்த்து பொறாமைப்​படத் தேவை​யில்​லை. யாரும் எதிர்​பார்க்​காத கூட்​டணி தமிழகத்​தில் அமைய வாய்ப்பு இருக்கிறது.

நாங்​கள் இடம்​பெறும் கூட்​டணி வெற்​றி​பெறும். துரோகம் செய்த பழனி​சாமி உள்​ளிட்ட சிலரைத் தவிர, மற்​றவர்​கள் மீது எனக்கு வருத்​தம் இல்​லை. அவர்​கள் தொடர்ந்து அமைதி காத்​தால், வரும் தேர்​தலுக்​குப் பின்​னர் அதி​முக பெரும் பின்​னடைவைச் சந்திக்கும். தேர்​தலுக்கு முன்பே விழித்​துக்​கொள்ள வேண்​டும்.

தங்​களிடம் இரட்டை இலை சின்​னம் இருக்​கிறது; பண பலம் இருக்​கிறது என்று கருதி தேர்​தலைச் சந்​தித்​தால், அதனால் ஏற்​படும் விளைவு​களுக்கு நாங்​கள் பொறுப்​பல்ல. அமமுக நிர்​வாகி​களை பழனி​சாமி விலை கொடுத்து வாங்​க முயற்​சிக்​கிறார். இவ்​வாறு டிடி​வி.​தினகரன்​ கூறி​னார்​.



By admin