2
தமிழ்த் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் உப சபாநாயகரும் உடுப்பிட்டி, நல்லூர் தொகுதிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் கரவை மு. சிவசிதம்பரத்தின் 23 ஆவது நினைவு தினம் இன்று வியாழக்கிழமை கரவெட்டியில் அனுஷ்டிக்கப்பட்டது.
இன்று காலை நெல்லியடி பஸ் நிலைய சதுக்கத்தில் அமைந்துள்ள அமரர் மு. சிவசிதம்பரத்தின் நினைவுச் சின்னம் அமைந்துள்ள இடத்தில் மக்கள் ஒன்றுகூடி அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர். அன்னாரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து நினைவு கூர்ந்தனர்.