• Fri. Oct 31st, 2025

24×7 Live News

Apdin News

மும்பை: 17 குழந்தைகளை பணயக் கைதியாக வைத்திருந்தவர் சுட்டுக்கொலை – நடந்தது என்ன?

Byadmin

Oct 30, 2025


மும்பையில் 17 குழந்தைகளை பிடித்து வைத்திருந்தவர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலி - என்ன நடந்தது?

பட மூலாதாரம், UGC/Rohit Arya

படக்குறிப்பு, ரோஹித் ஆர்யா

    • எழுதியவர், அல்பேஷ் கர்கரே
    • பதவி, பிபிசி மராத்திக்காக

மும்பையின் போவாய் பகுதியில் நபர் ஒருவர், ஆடிஷன் நடத்துவதாக 17 குழந்தைகளை வர வைத்து அக்குழந்தைகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அந்நபர் ரோஹித் ஆர்யா என அடையாளம் காணப்பட்டுள்ளார். போவாய் காவல் நிலையத்தை சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் அமோல் வக்மாரே நடத்திய துப்பாக்கிசூட்டில் ரோஹித் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ரோஹித் ஆர்யா இதுதொடர்பாக ஓர் காணொளியை சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார், அதில் சில கோரிக்கைகள் மற்றும் சில நபர்களிடம் பேச வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

தன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.

இதையடுத்து, உள்ளூர் மக்கள் மற்றும் காவல்துறை அந்த இடத்திற்கு சென்றனர். அதிகாரிகள் கதவை திறக்குமாறு அவரிடம் கூறியும் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை.



By admin