• Mon. Feb 24th, 2025

24×7 Live News

Apdin News

மும்மொழி கொள்கை: தமிழ்நாட்டில் இந்தி கற்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதா? 5 கேள்விகளும் பதில்களும்

Byadmin

Feb 19, 2025


மும்மொழிக் கொள்கை, தமிழ்நாடு, இந்தி எதிர்ப்பு

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் இந்தி மொழி குறித்த சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் பள்ளிக்கல்விக்கான நிதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் கூறியதே அதற்குக் காரணம்.

தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இதற்கு காட்டமாக பதில் அளித்து வருகின்றனர். மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கக் கூடாது என்று கூறி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் யாரும் இந்தி படிப்பதில்லையா? இந்தி பயில என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? தமிழ்நாட்டில் தமிழை தவிர வேறு எந்தெந்த மொழிகளை பயிலும் வாய்ப்புகள் உள்ளன? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. அந்த வரிசையில் 5 கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் பார்க்கலாம்.

மும்மொழிக் கொள்கை, தமிழ்நாடு, இந்தி எதிர்ப்பு
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தமிழ்நாட்டில் இந்தி பயில உள்ள வாய்ப்புகள் என்ன?

தமிழ்நாடு அரசு இரு மொழி கொள்கையை பின்பற்றுவதால், பள்ளிகளில் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் இந்தி கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு. (திருவள்ளூர் மாவட்டத்தில் வட இந்திய தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இயங்கும் அரசுப் பள்ளியில் இந்தி மொழியும், இந்தி மொழி வாயிலான கல்வியும் கற்றுக் தரப்படுகிறது. இது விதிவிலக்கானதாகும்).

By admin