• Wed. Feb 26th, 2025

24×7 Live News

Apdin News

மும்மொழி கொள்கை வட இந்திய மாநிலங்களில் எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது? இன்றைய டாப்5 செய்திகள்

Byadmin

Feb 26, 2025


டாப்5 செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

இன்றைய ( 26/02/2025) நாளிதழ்கள், இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

வட மாநில அரசுப் பள்ளிகளில் மும்மொழி கொள்கை அமலாக்கப்படும் விதம் குறித்து இந்து தமிழ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், அங்கே மூன்றாவது மொழியில் பூஜ்ய மதிப்பெண் பெற்ற மாணவர்களும் தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புகளுக்குச் செல்வதாக கூறப்பட்டுள்ளது.

அந்த செய்தியில், “புதிய கல்விக் கொள்கை 2020-ல், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளை மூன்றாவதாக போதிக்கலாம். எனினும், பெரும்பாலான அரசு பள்ளிகளில் மூன்றாவது மொழியாக உருது அல்லது சமஸ்கிருதம் மட்டுமே போதிக்கப்படுகின்றன. இவற்றில் உருதுவை முஸ்லிம்களும், சமஸ்கிருதத்தை முஸ்லிம் அல்லாதவர்களும் பயில்கின்றனர்.

வட இந்திய மாநிலங்களில் மூன்றாவது மொழியில் மாணவர்கள் பூஜ்ஜிய மதிப்பெண் பெற்றாலும் அவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு செல்லும் வாய்ப்பு மறுக்கப்படுவதில்லை. அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, பெரும்பாலான வட மாநிலங்களில் மூன்றாவது மொழித் தேர்வு பெயரளவில் மட்டுமே நடத்தப்படுவதாகப் புகார் உள்ளது.

By admin