118
ஈழத் தமிழ் மக்கள் சந்தித்த மாபெரும் இனப்படுகொலை அவலமான முள்ளிவாய்க்காலில் பணியாற்றிய மருத்துவரும் தற்போதும் தாயகத்தில் கடமையாற்றி வருபவருமான வைத்தியர் சண்முகராஜாவுக்கு கிளி மக்கள் அமைப்பின் உயரிய விருதான மண்ணின் மைந்தன் விருது வழங்கப்படவுள்ளது.
தனது மருத்துவ சேவைக்கும், சமூகப் பணிக்காகவும் இந்த விருது, எதிர்வரும் மார்ச் 14ஆம் நாளன்று இலண்டனில் இடம்பெறவுள்ள கிளி மக்கள் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலில் வழங்கப்படவுள்ளது.
தனது மருத்துவ சேவைக்கும், சமூகப் பணிக்காகவும் இந்த விருது, எதிர்வரும் மார்ச் 14ஆம் நாளன்று இலண்டனில் இடம்பெறவுள்ள கிளி மக்கள் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலில் வழங்கப்படவுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கல்விசமூக மற்றும் மனிதநேய பணிகளில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் வகையில் ‘மண்ணின் மைந்தன்’ மற்றும் ‘மண்ணின் மகள்’ விருதுகள் வழங்கப்படுகின்றன.
கடந்த காலத்தில் கல்வியியலாளர் குருகுலராஜா, மருத்துவர் சத்தியமூர்த்தி, ஓய்வுநிலை அதிபர் சோதிநாதன், ஓய்வுநிலை ஆசிரியர் மரியதாஸ், எழுத்தாளர் தாமரைச்செல்வி மற்றும் வைத்தியர் விக்னேஸ்வரன் போன்றோர் இவ்விருதுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளி மக்கள் அமைப்பினால் 2018ம் ஆண்டு தொடக்கம் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றமை தெரிந்ததே.
