• Thu. Feb 19th, 2026

24×7 Live News

Apdin News

மெகெல்லன்: 16ஆம் நூற்றாண்டின் ரத்தவெறி கொண்ட கொடூரமான காலனித்துவ மாலுமியா?

Byadmin

Feb 19, 2026


மெகெல்லன்: 16ஆம் நூற்றாண்டின் ரத்தவெறி கொண்ட கொடூரமான காலனித்துவ மாலுமியா?

பட மூலாதாரம், Getty Images

ஒரு பிரபலமான போர்த்துகீசிய மாலுமியின் திருப்புமுனைப் பயணத்தின் கதையைக் கூறும் ஒரு புதிய திரைப்படமான மெகெல்லன் வெளியாகியுள்ளது. அந்த மாலுமி ஒரு முன்னோடியாக நினைவுகூரப்படுகிறார். ஆனால் சிலர் அவர் அதிகப்படியான வன்முறையாளர், ரத்தவெறி கொண்டவர் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தத் திரைப்படத்தின் கதை, இந்தோனீசியாவில் “மசாலா தீவுகள்” என்று அழைக்கப்பட்ட இடங்களுக்கு ஒரு புதிய கடல் வழியை உருவாக்கும் பெரும் லட்சியங்களைக் கொண்டிருப்பதில் தொடங்குகிறது. அவர் தனது சொந்த நாட்டிலிருந்து ஸ்பெயினுக்கு தப்பிச் சென்று அரசர் முதலாம் சார்ல்ஸின் ஆதரவுடன், ஒரு கடினமான கடல் பயணத்தை மேற்கொள்கிறார்.

அப்போது அவரது குழுவினர் பலர் வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படும் ஸ்கர்வி நோயால் இறக்கின்றனர் அல்லது கலகம் செய்ததற்காகக் கொல்லப்படுகின்றனர். அந்த நேரத்தில் பிலிப்பின்ஸ் என்று அழைக்கப்படும் மக்டன் தீவை அடைந்த மெகெல்லன், உள்ளூர் மக்களுடனான போரின்போது கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்.

கடந்த 1519ஆம் ஆண்டு அவர் தொடங்கிய இந்த மிக முக்கியமான பயணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலை கிட்டத்தட்ட ஒரு புராணக் கதை போல மாறிவிட்டது. பல வரலாற்று ஆசிரியர்கள் ஒரு கப்பல் உலகம் முழுவதும் பயணம் செய்தது இதுவே முதல் முறை என்கின்றனர். மெகெல்லன் 1521இல் மக்டன் தீவில் உயிரிழந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது குழுவின் மற்றொரு கேப்டனான ஜுவான் செபாஸ்டியன் எல்கானோ அடுத்த ஆண்டில் ஸ்பெயினுக்கு திரும்பும் பயணத்தை முடித்தார்.

லாரன்ஸ் பெர்கிரீன் என்ற எழுத்தாளர், மெகெல்லனின் சாதனைகள் கிறிஸ்டோபர் கொலம்பஸின் சாதனைகளைவிட மிக முக்கியமானவை என்கிறார். நாசாகூட அதன் விண்கலங்களில் ஒன்றுக்கு அவரது பெயரைச் சூட்டியது. இருப்பினும், அவரது முக்கியத்துவம் குறித்த விஷயத்தில் சிலர் உடன்படவில்லை. அவர் ஸ்பெயின் வரையிலான முழுமையான பயணத்தையும் முடிக்கும் வரை உயிர் வாழவில்லை என்பதே அதற்குக் காரணம்.

By admin