• Mon. Dec 1st, 2025

24×7 Live News

Apdin News

மெக்காலே சுமார் 200 ஆண்டுக்கு முன்பு இந்திய கல்வி முறையில் செய்த மாற்றங்கள் என்ன?

Byadmin

Dec 1, 2025


200 ஆண்டுகள் கழித்தும் விவாதிக்கப்படும் மெக்காலே இந்திய கல்வியில் செய்த மாற்றம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மெக்காலே

“மெக்காலே கல்வி அமைப்பு பிரிட்டன் காலனித்துவ அடிமை மனநிலையை இந்தியர்கள் மத்தியில் விதைத்தது. இந்த அடிமை மனநிலை அடுத்த 10 வருடங்களில் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்,” என பிரதமர் நரேந்திர மோதி சமீபத்தில் பேசியிருந்தார்.

அதன் பிறகு மெக்காலே பற்றிய விவாதங்கள் கவனம் பெற்றன. யார் இந்த மெக்காலே? இந்திய கல்வி அமைப்பில் அவர் மேற்கொண்ட மாற்றங்கள் என்ன? பிரதமர் மோதி அவரைப் பற்றி குறிப்பிட்டது ஏன்?

மோதி கூறியது என்ன?

எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நிறுவனரான ராம்நாத் கோயங்காவின் நினைவாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த ஆறாவது ஸ்மிரிதி வியாகனா நிகழ்ச்சியில் பேசுகின்றபோது இந்த கருத்தை தெரிவித்திருந்தார் பிரதமர் மோதி.

“மெக்காலே இந்தியர்களின் மனங்களை பிரிட்டன்மயமாக்கினார். பண்டைய இந்திய கல்வி அமைப்பை அவர் முற்றிலுமாக அழித்தார். பிரிட்டன் மொழி மற்றும் சிந்தனையை இந்தியாவில் அறிமுகம் செய்தார். அதன் விளைவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த இந்திய அறிவு, அறிவியல், கலை, கலாசாரம், பாரம்பரியம் மற்றும் வாழ்க்கை முறை அழிக்கப்பட்டது.” என்றார் மோதி

மெக்காலே, மோதி, பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியா, ஆங்கில வழிக் கல்வி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரிட்டன் சித்தாந்தம் பற்றி பிரதமர் மோதி பேசியிருந்தார்

“பிரிட்டிஷார் சொல்வதைப் போல இந்தியர்கள் வாழத் தொடங்கினர். இதனால் நம்முடையது என்னவென்பதை நாம் மறந்துவிட்டோம். நம்முடைய கலாசாரம், பாரம்பரியங்கள் மற்றும் கல்வியை புகழாமல் குறைவாக பார்க்கத் தொடங்கிவிட்டோம். இறக்குமதி செய்யப்பட்ட எண்ணங்கள், சரக்குகள், வசதிகள் மற்றும் மாதிரிகளின்படி நாம் வாழத் தொடங்கினோம். மற்றவர்களுடைய கருத்துக்கள் முதன்மையானது என சிந்திக்கத் தொடங்கினோம்.” எனத் தெரிவித்தார் மோதி.

By admin