• Tue. May 13th, 2025

24×7 Live News

Apdin News

மேனர் ஹவுஸில் நடந்த கொள்ளை சம்பவத்தில் 87 வயது நபர் கொலை

Byadmin

May 12, 2025


மேனர் ஹவுஸில் (Manor House) நடந்த கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 87 வயது நபர் இரண்டு நாட்களுக்குப் பிறகு இறந்தார்.

வடக்கு இலண்டனில் நடந்த கொள்ளை சம்பவத்தைத் தொடர்ந்து, 87 வயது முதியவர் இறந்ததை அடுத்து, கொலை சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செவ்வாய்கிழமை மாலை 5.53 மணிக்கு மேனர் ஹவுஸில் உள்ள குட்சைல்ட் வீதியில் இடம்பெற்ற ஒரு கொள்ளை சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் பொலிஸார் அங்கு வந்தனர்.

இலண்டன் ஆம்புலன்ஸ் சேவையும் சம்பவ இடத்திற்குச் சென்றதுடன், 87 வயது முதியவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவசர உதவிகள் வழங்கப்பட்ட போதிலும், அந்த நபர் வியாழக்கிழமை இறந்தார். அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

பிரேத பரிசோதனை உரிய நேரத்தில் நடைபெறும் என்றும், கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 59 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மெட் பொலிஸார் குறிப்பிட்டனர்.

பொது ஒழுங்கை இன ரீதியாக சீர்குலைத்த குற்றச்சாட்டின் பேரிலும், பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரிலும் அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

By admin