மேற்கு ஆசிய போரால் நாடு முழுவதும் கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 2-வது அமர்வு நடைபெற்று வருகிறது. இன்று காலை மக்களவை கூடியதும், எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினையை கிளப்பி விவாதிக்க வேண்டும் என்றனர்.
இதனால் ஏற்பட்ட அமளியால் மதியம் 12.30 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. 12.30 மணிக்கு பிறகு அவை அலுவல்கள் தொடர்ந்து நடைபெற்றது. அதே நேரத்தில் மேல்சபை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.